சனி, 23 ஜனவரி, 2010

காதல் பசி

நடைபயிலும் நதியிடத்து
நாணம் என்ன கேட்டுச்சென்றேன்-உன்
நளினம் மட்டும் காட்டியது!

மலர்சொரியும் மரமிடத்து
வாசம் என்ன கேட்டுச்சென்றேன்-உன்
சுவாசம் மட்டும் வீசியது!

மது உண்ணும் மலர்வண்டிடம்
மலரென்ன கேட்டுச்சென்றேன்-உன்
உதட்டை தீண்டியது!

வண்டிற்கு கொடுத்திட்ட நீ
வாணனுக்கும் கொடுப்பாயோ மலரை
நானும் பசியாற!