சனி, 26 டிசம்பர், 2009

உன் நினைவு போதும்

ஒரு விழி மனதுக்குள் தேடிப்பார்க்க
உயிருக்குள் உயிரொன்று வந்து சேர்க்க
பெண்மையின் விழிகளும் உயிரை வாங்குமோ!
கனவுகள் தீர்ந்து நான் வெறுமே எழுந்து
கண்மணி நினைவினில் கொஞ்சம் தவழ்ந்து
தூக்கத்தை வென்றதால் காதல் ஆகுமோ!
உந்தன் வார்த்தை அந்த வார்த்தை
கேட்கத்தானே காத்துக்கிடந்தேன்-உன்
நினைவில் நாளெல்லாம்!
நீங்கிச்சென்றும் விலகிச்சென்றும்
என்னுள் உன்னால் உள்ள அன்பால்-நான்
தினமும் வாழ்கிறேன்!
அன்பே நீ எங்கே என்று
விழிகள் தேட முடியாது!
உன் சுவாசம் வாசம் மட்டும்
இலைகள்கூட அறியாது!
நீ களைத்த சொர்க்களெல்லாம்
கவிதையென்று நானுரைக்க
நீ எறிந்த பொருள்களெல்லாம்
அழகுபடுத்தி நான் பார்க்க
அழகே நீ ஆரியமெனினும்
உன்னை மறக்க மனம் நோகுதே!
உயிரே நீ ஏற்க்க மறுப்பினும்-உன்
நினைவால் வாழ உள்ளம் சொல்லுதே!
காலை உணவில் சாலை வழியில்
மாலை வெயிலில் உன் முகமே காண்கிறேன்!
இரவு தூக்கம் போனபின்பும்-உன்
நினைவால் நான் தூக்கம் கொள்கிறேன்!

ஞாயிறு, 13 டிசம்பர், 2009

என் காதலி

காற்றும்
கவிதை பாடும்-உன்
கருங்கூந்தலை
கலையும்போது!

வான்முகில்
ஓவியமாகும்-உன்
திருமுகத்தை
பதியும்போது!

மழைத்துளியும்
மரித்துப்போகும்-உன்
குருஞ்சிரிப்பில்
நனையும்போது!

மழையே மரிக்கும்போது
மழைக்கு ஒதுங்கும் நான் எம்மாத்திரம்!

உன் நிழலாக வாழ்கிறேன்

தனிமையில் என்னுடன் கைகோர்த்தே
நடக்கிறது உன் நினைவு!
ஏன்?
நான் உன்னை காதலிக்கிறேன்
இல்லை!
நான் உன்னில் வசிக்கிறேன்
இல்லை!
நான் உன்னை சுவாசிக்கிறேன்
இல்லவே இல்லை!
வேறென்ன?
நான் உன்னுடன் வாழ்கிறேன்
உன் நிழலாக!