சனி, 27 ஏப்ரல், 2013

மரமாகிப் போனவன்

மதி சூடும் இரவு மகள்
மதியின்று வரவில்லை
மனத்தோடு சென்றிடுவாய் - நாளை
மறவாமல் வந்திடுவாய் என்றாள்!

மரமென்று நினைத்தவளுக்கு-என்
மனம் எப்படி தெரியும் - உன்
மறுநாள் வருகைக்கு நான்
மரமாகிப் போனவன் என்று!