செவ்வாய், 7 மே, 2013

நிழல் இரண்டு

தனியாய் மின்கம்ப விளக்கு
தவழ்ந்து செல்லும் மழைநீர்
தடவிச் செல்லும் காற்று
தலையாட்டும் மரம்
தயக்கத்தில் யாவும்

நிழல் இரண்டு
உடல் ஒன்றா! என?

சனி, 27 ஏப்ரல், 2013

மரமாகிப் போனவன்

மதி சூடும் இரவு மகள்
மதியின்று வரவில்லை
மனத்தோடு சென்றிடுவாய் - நாளை
மறவாமல் வந்திடுவாய் என்றாள்!

மரமென்று நினைத்தவளுக்கு-என்
மனம் எப்படி தெரியும் - உன்
மறுநாள் வருகைக்கு நான்
மரமாகிப் போனவன் என்று!