திங்கள், 22 பிப்ரவரி, 2010

தள்ளிவைக்காதே

மார்கழி குளிரில் மனம் துள்ளியெழுந்து
காலைப்பனியில் கால் வைத்தபோது
கண்முன்னே பெண்முகம் மின்னுவதென்ன
அப்பொழுது என்மனம் என்னுவதென்ன-அதை
அறிவாயோ ஆடைகட்டிய நதியே-இவையெல்லாம்
உந்தன் பெண்மை செய்த சதியே!

பஞ்சணையில் நீயென்னை
தஞ்சம்கொள்ள கேட்டேனோ!
அஞ்சிவரும் காவிரியாய்
ஆர்ப்பரிக்க கேட்டேனோ!
கொஞ்சிவரும் இவன் இதழில்-உன்
பிஞ்சுமுகம் வைப்பாயோ பின்
இவன் இதழை உன் இதழால்
ஈரம் கொஞ்சம் செய்வாயோ!

வேறென்ன நான்கேட்க
சீர்கொண்ட தாரகையே
மலர்க்கூட்டம் நமைப்பார்க்க-நான்
உன் மடியில் தலைசாய்க்க
பெண்விரலும் என் மார்பில்
கோலம்போட கேட்கின்றேன்!

தாரைவார்த்தபிறகு
இவைசெய்வேன் நானென்று-நீ
தள்ளிவைத்தல் ஆகாது!
காதலியின் இதழ்முத்தம்
கெஞ்சலாய் ஒரு யுத்தம்
பின்பக்க தழுவலில்
பெண் மொத்தம் என்கைகளில்
அடைந்திடும் சுகமும்
இதன்பின் வருமோ-பெண்மை
சம்மதம் தருமோ!