செவ்வாய், 2 மார்ச், 2010

எப்படிச்சொல்வேன்?

பூ பூக்கும் மலர்வனமெல்லாம்
பூ வாசம்தான்!
தேன் சிந்தும் எந்தன் நினைவில்
உன் வாசம்தான்!

மலர்தேடிச்சென்று
மது உண்ணும் வண்டு
மலர்வாடிபோனாலும்
மனம் மாறுமோ!

மணம்கொண்ட காற்றில்-என்
மனம்தேடும்போது-நீ
மறைந்தோடினாலும்-நான்
உனைத்தீண்டுவேன்!

இளந்தென்றலே-என்
இளமையும் நீயடி
உனைசேர்ந்திடும்-அந்த
இளையவன் நானடி!

பாவை பார்த்த பார்வை
என்ன எண்ணுதோ-நான்
பார்த்த பார்வை பாவம்
என்று எண்ணுதோ!

தேன் தராத பூவும்
எங்கு உள்ளது-ஆண்
விழி தொடாத பெண்மை
எங்கு உள்ளது!

நான்
காலம்கடந்த
இளைய கவிஞன்-பெரும்
காதல் நோயால்
துடிக்கும் இளைஞன்!

உனை நெஞ்சில்
சூல்கொண்ட நான்
பெண்ணல்ல
நீர் விலகிய காலம் சொல்ல!