ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

என் தாகம் தீர்க்கும் அருவி நீ!

காதல் எந்தன் காதில்-ஒரு
வார்த்தை சொல்லவே
காலம்தாண்டி காதல்கொண்டு
காத்துக்கிடந்தேன்!

பூ புன்னகைக்கும் நேரந்தனில்
செத்துவிடவே
எந்தன் நெஞ்சும் என்னை என்னை
ஆணையிடுதே!

மழையின் மேகம் கண்ட-ஆண்
மயிலைப்போலவே
உன்னை கண்ட பின்பு-என்
உள்ளம் துள்ளுதே!

நீரின் வாசம் கண்ட சிறு
பறவை போலவே!
உந்தன் வாசம் கண்டால்
என் மனமும் பறக்குதே!

தாகம் தீர்க்கும் அருவி
பேரழகி அல்லவா-என்
தாகம் தீர்க்கும் அருவி நீ!
பேரழகி நீ! அல்லவா!

மீண்டும் ஜனனம்

மண்ணோடு வான்வந்து காதல்செய்ய
காற்றோடு மழைவந்து கவிதைபாடும்!
உன்னோடு நான்சேர்ந்து காதல்செய்ய
என் மொழியோடு பேனாவும் யுத்தம் கொள்ளும்!

உன் அழகை நான் எழுத உத்தேசம்கொள்ள
உயிர் மெய் எழுத்தும் வரிசையில் நிற்கும்!

எதனோடு எதை சேர்த்து நான்
உனை வர்ணிப்பேன்-என்
உயிரோடு உன் மெய் சேர்த்தால்
நான் மீண்டும் ஜனிப்பேன்!