ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

மீண்டும் ஜனனம்

மண்ணோடு வான்வந்து காதல்செய்ய
காற்றோடு மழைவந்து கவிதைபாடும்!
உன்னோடு நான்சேர்ந்து காதல்செய்ய
என் மொழியோடு பேனாவும் யுத்தம் கொள்ளும்!

உன் அழகை நான் எழுத உத்தேசம்கொள்ள
உயிர் மெய் எழுத்தும் வரிசையில் நிற்கும்!

எதனோடு எதை சேர்த்து நான்
உனை வர்ணிப்பேன்-என்
உயிரோடு உன் மெய் சேர்த்தால்
நான் மீண்டும் ஜனிப்பேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக