செவ்வாய், 21 ஜூன், 2011

அன்பே சிவம்

அணு கொடுத்த அண்டமோ
பாவம் போக்கும் பரமனோ
எதனை நீ ஏற்றுக்கொள்வாய்!

உணவோடு உடைகேட்டு
உயிர்வாழ திறம் கேட்கும்
பாமரர்க்கு உதவாமல் நீ!

ஐம்பொன்னில் சிலையையும்
ஆயிரம் கோவிலையும்
அமைப்பது பிழையல்லவோ!

இறுமாப்பும் கொள்ளாது
இருப்பதூஉம் நில்லாது
இதனையா வாழ்வென்கிறாய்!

அன்பெனும் சிவ மந்திரம்
ஓதாதவன் உயிரோடு
இருந்தென்ன? இறந்தும் என்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக