செவ்வாய், 21 ஜூன், 2011

சொர்க்கம்

பனி மேகங்களுக்கு யாரும்
பாடம் நடத்தி சென்றதில்லை
பசும் புல்வெளிக்கு உயிரளிக்க
மேகம் தவர்வதில்லை!

மனிதம் பேசும் எவனும்-இங்கு
மனிதம் காப்பதில்லை-பாமரனின்
குறைகள் கேட்கும் கடவுள்கூட
பசியை போக்கவில்லை!

நீ!
வாழ வந்த வாழ்வில்
ஏன் உய்ய மறுக்கிறாய்-நீ
பிறந்த பலன் இதுவென்று
உணர மறுக்கிறாய்!

ஏழை
கண்ணில் கடவுள் காணும்போது
மண்ணில் சொர்க்கம் காணுவாய்-உன்
உறவை உலகம் நாடும்போது
உன்னில் சொர்க்கம் நீளுவாய்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக