திங்கள், 22 பிப்ரவரி, 2010

தள்ளிவைக்காதே

மார்கழி குளிரில் மனம் துள்ளியெழுந்து
காலைப்பனியில் கால் வைத்தபோது
கண்முன்னே பெண்முகம் மின்னுவதென்ன
அப்பொழுது என்மனம் என்னுவதென்ன-அதை
அறிவாயோ ஆடைகட்டிய நதியே-இவையெல்லாம்
உந்தன் பெண்மை செய்த சதியே!

பஞ்சணையில் நீயென்னை
தஞ்சம்கொள்ள கேட்டேனோ!
அஞ்சிவரும் காவிரியாய்
ஆர்ப்பரிக்க கேட்டேனோ!
கொஞ்சிவரும் இவன் இதழில்-உன்
பிஞ்சுமுகம் வைப்பாயோ பின்
இவன் இதழை உன் இதழால்
ஈரம் கொஞ்சம் செய்வாயோ!

வேறென்ன நான்கேட்க
சீர்கொண்ட தாரகையே
மலர்க்கூட்டம் நமைப்பார்க்க-நான்
உன் மடியில் தலைசாய்க்க
பெண்விரலும் என் மார்பில்
கோலம்போட கேட்கின்றேன்!

தாரைவார்த்தபிறகு
இவைசெய்வேன் நானென்று-நீ
தள்ளிவைத்தல் ஆகாது!
காதலியின் இதழ்முத்தம்
கெஞ்சலாய் ஒரு யுத்தம்
பின்பக்க தழுவலில்
பெண் மொத்தம் என்கைகளில்
அடைந்திடும் சுகமும்
இதன்பின் வருமோ-பெண்மை
சம்மதம் தருமோ!

சனி, 23 ஜனவரி, 2010

காதல் பசி

நடைபயிலும் நதியிடத்து
நாணம் என்ன கேட்டுச்சென்றேன்-உன்
நளினம் மட்டும் காட்டியது!

மலர்சொரியும் மரமிடத்து
வாசம் என்ன கேட்டுச்சென்றேன்-உன்
சுவாசம் மட்டும் வீசியது!

மது உண்ணும் மலர்வண்டிடம்
மலரென்ன கேட்டுச்சென்றேன்-உன்
உதட்டை தீண்டியது!

வண்டிற்கு கொடுத்திட்ட நீ
வாணனுக்கும் கொடுப்பாயோ மலரை
நானும் பசியாற!

சனி, 26 டிசம்பர், 2009

உன் நினைவு போதும்

ஒரு விழி மனதுக்குள் தேடிப்பார்க்க
உயிருக்குள் உயிரொன்று வந்து சேர்க்க
பெண்மையின் விழிகளும் உயிரை வாங்குமோ!
கனவுகள் தீர்ந்து நான் வெறுமே எழுந்து
கண்மணி நினைவினில் கொஞ்சம் தவழ்ந்து
தூக்கத்தை வென்றதால் காதல் ஆகுமோ!
உந்தன் வார்த்தை அந்த வார்த்தை
கேட்கத்தானே காத்துக்கிடந்தேன்-உன்
நினைவில் நாளெல்லாம்!
நீங்கிச்சென்றும் விலகிச்சென்றும்
என்னுள் உன்னால் உள்ள அன்பால்-நான்
தினமும் வாழ்கிறேன்!
அன்பே நீ எங்கே என்று
விழிகள் தேட முடியாது!
உன் சுவாசம் வாசம் மட்டும்
இலைகள்கூட அறியாது!
நீ களைத்த சொர்க்களெல்லாம்
கவிதையென்று நானுரைக்க
நீ எறிந்த பொருள்களெல்லாம்
அழகுபடுத்தி நான் பார்க்க
அழகே நீ ஆரியமெனினும்
உன்னை மறக்க மனம் நோகுதே!
உயிரே நீ ஏற்க்க மறுப்பினும்-உன்
நினைவால் வாழ உள்ளம் சொல்லுதே!
காலை உணவில் சாலை வழியில்
மாலை வெயிலில் உன் முகமே காண்கிறேன்!
இரவு தூக்கம் போனபின்பும்-உன்
நினைவால் நான் தூக்கம் கொள்கிறேன்!

ஞாயிறு, 13 டிசம்பர், 2009

என் காதலி

காற்றும்
கவிதை பாடும்-உன்
கருங்கூந்தலை
கலையும்போது!

வான்முகில்
ஓவியமாகும்-உன்
திருமுகத்தை
பதியும்போது!

மழைத்துளியும்
மரித்துப்போகும்-உன்
குருஞ்சிரிப்பில்
நனையும்போது!

மழையே மரிக்கும்போது
மழைக்கு ஒதுங்கும் நான் எம்மாத்திரம்!

உன் நிழலாக வாழ்கிறேன்

தனிமையில் என்னுடன் கைகோர்த்தே
நடக்கிறது உன் நினைவு!
ஏன்?
நான் உன்னை காதலிக்கிறேன்
இல்லை!
நான் உன்னில் வசிக்கிறேன்
இல்லை!
நான் உன்னை சுவாசிக்கிறேன்
இல்லவே இல்லை!
வேறென்ன?
நான் உன்னுடன் வாழ்கிறேன்
உன் நிழலாக!

சனி, 28 நவம்பர், 2009

பார்வை!

பெண் பார்க்கும்
மென் பார்வை
மின்சாரம் பாய்ச்சுமென்று-உன்
கண்பார்த்துக்கிடந்தேன்!
முன் பார்வை
நீ பார்க்க-உன் முன்னே
நான் நிற்க
பின் பார்வை
பார்த்தென்னை ஆட்கொண்டதேனடியோ!

திங்கள், 12 அக்டோபர், 2009

களவு

காதல் என்ன
களவாடும் தளமா-உன்
கைக்குட்டை முதல் நீ
கசக்கி எரிந்த
காகிதம் வரை
களவாட சொல்கிறதே மனம்!

-----X-----X-----X-----X-----

களவும் கற்றுமற
களவுபோன என்னை மறக்காதே!

திங்கள், 5 அக்டோபர், 2009

காதலனாக வேண்டும்

பூவா பூவை பனி
புணரும் நேரம்
பூவை மனதில்-என்
காதல் பூத்திட வேண்டும்!

சோம்பல் முறிக்கும்
ஆம்பல் மலரிடம்-என்
அன்பை மட்டும்
அறிவிக்க வேண்டும்!

ஒளியும் வளியில்
வளரும் நேரம்-என்
வலியை வளையால்
உணர்ந்திட வேண்டும்!

நீரில் நனையும்
நறுமுகையிடம்-நான்
உருகும் காரணம்
உரைத்திட வேண்டும்!

பணிக்கு செல்லும்
பனிமலரிடம்-நான்
பணிந்தவன் என்று
பகிர்ந்திட வேண்டும்!

மதிய உணவில்
மரம்கொத்தியாகி-அவள்
மனதை என் நினைவு
கொத்திப்போக வேண்டும்!

அந்தி நேரம்
அந்திமந்தாரையிடம்-அவள்
ஆணவம் பற்றி
அவிழ்த்துவிட வேண்டும்!

துயிலும் சிறிய
தும்பை மலரிடம்-என்
துன்பம் பற்றி
தெரிவிக்க வேண்டும்!

நடுநிசி நேரம்
நிலவின் துயிலை-நான்
கணவாய் மாறி
கலைத்திட வேண்டும்!

அனைத்தும்!
பெண்ணவள் என்னவள் ஆன பின்பு!

காத்திருக்கிறேன்!

என்னோடு நீ கொண்ட வார்த்தை
சில வார்த்தை என்றாலும்
மறக்காது கண்மணியே!

உன்னோடு நான் வாழ்ந்த காலம்
சில நொடிகள் என்றாலும்
தீராது பொன்மணியே!

உன் நினைவு என் கனவை
தட்டி தட்டி எழுப்புதடி
என் காதல் உன் நெஞ்சை
துளிகூட இழுக்கவில்லையா!

எப்பொழுது தோன்றுகிறதோ
அந்த காதல் வலி
அப்பொழுது சொல் என்னிடம்
அல்லது என் கல்லறையிடம்!
காத்திருக்கிறேன்!

காதல் வழங்குதியோ

காற்று கவிதையிலே என்
காதலை தூதுவிட்டேன்-அது
எந்தன் கனவுகளை-உன்
நெஞ்சில் எழுதட்டுமே!

நான் பார்க்கும் விழிச்சுடரே
பெண் பாவை பொருதியே-நான்
நோக்கும் நிலமெங்கிலும்-உன்
நிழலே தெரியுதடி!

அந்திவான முகிலே-அதில்
சிலிர்த்திடும் கருங்குயிலே-உன்
நெஞ்சில் குடியிருக்க-நான்
சரிதானா சொல் மயிலே!

ஆரிய குலமகளே
ஆதவ குலத்தோன்றலே-உன்
அன்பில் உறைந்தானடி இந்த
திராவிட திருச்சோழனே!

வானின் ஒரு மதியே-இந்த
வாணன் திருமதியே-உனை
நாளும் நினைத்திருக்க-உன்
காதல் வழங்குதியோ!