திங்கள், 5 அக்டோபர், 2009

காதல் வழங்குதியோ

காற்று கவிதையிலே என்
காதலை தூதுவிட்டேன்-அது
எந்தன் கனவுகளை-உன்
நெஞ்சில் எழுதட்டுமே!

நான் பார்க்கும் விழிச்சுடரே
பெண் பாவை பொருதியே-நான்
நோக்கும் நிலமெங்கிலும்-உன்
நிழலே தெரியுதடி!

அந்திவான முகிலே-அதில்
சிலிர்த்திடும் கருங்குயிலே-உன்
நெஞ்சில் குடியிருக்க-நான்
சரிதானா சொல் மயிலே!

ஆரிய குலமகளே
ஆதவ குலத்தோன்றலே-உன்
அன்பில் உறைந்தானடி இந்த
திராவிட திருச்சோழனே!

வானின் ஒரு மதியே-இந்த
வாணன் திருமதியே-உனை
நாளும் நினைத்திருக்க-உன்
காதல் வழங்குதியோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக