திங்கள், 5 அக்டோபர், 2009

காத்திருக்கிறேன்!

என்னோடு நீ கொண்ட வார்த்தை
சில வார்த்தை என்றாலும்
மறக்காது கண்மணியே!

உன்னோடு நான் வாழ்ந்த காலம்
சில நொடிகள் என்றாலும்
தீராது பொன்மணியே!

உன் நினைவு என் கனவை
தட்டி தட்டி எழுப்புதடி
என் காதல் உன் நெஞ்சை
துளிகூட இழுக்கவில்லையா!

எப்பொழுது தோன்றுகிறதோ
அந்த காதல் வலி
அப்பொழுது சொல் என்னிடம்
அல்லது என் கல்லறையிடம்!
காத்திருக்கிறேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக