திங்கள், 5 அக்டோபர், 2009

காதலர் தினம்

கண் மையிழையோடிய
கண்க ளிரண்டினில்
மச்சங்கள் நின்றாட!
செவ்விதழோரமாய்
சிந்தும் புன்னகையில்-என்
நெஞ்சம் எழுந்தாட!
செவிகளிரண்டிலும்
சிறிய குண்டலங்கள்
சிந்து படித்தாட!
கார் மேகமதை
கூந்தலாய் கொண்ட
கன்னியும் சேர்ந்தாட!
பெண்மை சமைத்திட்ட
பாக மிரண்டும்-என்
எண்ணத்தில் எழுந்தாட!
வஞ்சியவள் இடைதனில்
கஞ்சனம் செய்திட்ட
பிரம்மனும் ஆட!
இரு கால்கொலுசொலியில்
முக்காலத்தை மறந்து
நானும் ஆட!
நானாட! நீயாட! நாமாட!
நம்மோடு காதலர் கூட்டமெல்லாமாட!
நடக்கிறது காதலர் திருவிழா-புது
காதலர்க்கு பெருவிழா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக