திங்கள், 5 அக்டோபர், 2009

ஆம் என்று சொல்!

வான்முகில் தேரில்
வளம் வரும்
மானே-உனை
சேர்ந்தால் வாழ்வில்
முக்திதானே!

சின்னவள் தரிக்கும்
சிலம்புதனில்-நான்
ஒலியாய் வேண்டும்!
பெண்மை பார்க்கும்
பார்வைதனில்-நான்
ஒளியாய் வேண்டும்!

பனியில் நனைந்த
பூவாய் என்றும்-உன்
நினைவு இருக்கும்
எந்தன் மனதில்!
வாசம் தரும்
பூவாய் என்றும்
வாழவேண்டும்
பாவை மனதில்!

காலை எது
மாலை எது
மறந்திருந்தேன்
நாளும் நானே!
உன்னை சேரும்
நாளை எண்ணி
உறங்காத
இரவாய் ஆனேன்!

பனிக்காற்றே
பரவச ஊற்றே
பக்கம் வந்தால்
பறக்கிறேன் நானே!
காலம் தாண்டும்
காதல் இதுவே
கனவிலும் உனை
மறவேன் நானே!

வான்மதியே
வானவில் தீவே
வாழவேண்டும்
உன்னுடன் நானே!
என்வாழ்வை
என்னுடன் வாழ
வார்த்தை ஒன்றை
உதிர்ப்பாய் பெண்ணே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக