திங்கள், 5 அக்டோபர், 2009

பூக்களின் மத்தியில்

சில்லென்று வீசும் வாடைக்காற்றில்-நீ
குளிர்கொண்டு என்தோள் சாயும்போதும்-என்
வலக்கையை வலக்கையில் ஏந்தி
கைரேகைகளில் ஊர்ந்திடும்போதும்
உன் உதட்டின் ஈரம் என்
உள்ளங்கையை ஈரமாக்கிடும்போதும்
நீகொண்ட காதலை நானறிவேன்!
நீகொண்ட காதலை நானறியும்போது
நான்கொண்ட காதலை பூக்களரியும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக