திங்கள், 5 அக்டோபர், 2009

ஏதேனும் சொல்!

உன் முகத்தை நானும் மறந்திருந்தேன்-நீ
மறுமுறை ஒருமுறை காணும்வரை!
கேளிக்கை முடிந்த மறுகணமே-என்
உணர்வுகள் போனது ஒருவிதமே-உன்
குரலில் கரையும் கைப்பேசி என்னோடு-என்
நினைவு முழுதும் உன்னோடு!
நானாய் மறக்க நினைத்தாலும்-உன்
நினைவுகள் என்னை விடுவதில்லை-உந்தன்
சிரிப்பொலியில் சிதற ஆசைகொண்டேன்-உன்
சேலையாய் மாற மோகம் கொண்டேன்!
ஆம் என்று சொல்லிவிடு
ஆயிரம் ஆண்டுகள் காத்திருப்பேன்!
இல்லை என்று சொல்லிவிடு
இன்னொரு பெண்ணை நினையாதிருப்பேன்!
ஏதேனும் சொல்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக