திங்கள், 5 அக்டோபர், 2009

உனைப்பற்றி எழுத

வனத்த அழகில்
வளர்ந்து நிற்கும் செம்மீனே!
உன் வளர்ந்த பெண்மை
என்னை கொல்லுது செம்மானே!
உன் சிரித்த முகத்தின்
உதட்டில் வடியும் செந்தேனே!
அதை எடுத்து குடித்து
மயக்கம் கொள்ள வந்தேனே!
உதிரும் பூவின்
உதிரம் கொண்டு வந்தேனே!
உன் உயிரின் உள்ளே
ஒளிந்து கொள்வேன் பெண்மானே!
உன் கண்ணிரண்டை பார்த்தால்
காதல் செய்யத்தூண்டும்-உன்
கண்கள் பார்த்தால் எவனும்
கவிஞனாக வேண்டும்!
கவிஞனான எவனும்
கவிதை எழுத வேண்டும்!
உனைப்பற்றி எழுத
உதிர மிழக்கவேண்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக